மாலை 4 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 
Rain Rain

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

tn

இந்நிலையில் தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல் ,ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர்,புதுக்கோட்டை ,ராமநாதபுரம், சேலம் ,சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி ,திருவாரூர் ,திருச்சி ,திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு  வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.