தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை!!

 
rain

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

tn
,
தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை ,கடலூர் ,பெரம்பலூர், அரியலூர் ,திருவாரூர் ,தஞ்சாவூர் ,ராமநாதபுரம், திருப்பூர், கரூர் ,திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி ,சேலம், புதுக்கோட்டை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.