தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மாலை 4 மணிவரை மழைக்கு வாய்ப்பு

 
rain

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை  ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

rain

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று  முதல் 27.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.12.2023: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29.12.2023 முதல் 31.12.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

tn
இந்நிலையில்  தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் ,திருவாரூர் ,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் , சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை ,கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது  முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.