ஏப்.8 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்..

 
rain


 தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 8-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம்

6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.