சந்திரயான்-3 விண்கலத்தின் ஆரம்பக்கட்ட சோதனை வெற்றி.. - இஸ்ரோ அறிவிப்பு!!

 
சந்திரயான் 3 விண்கலத்தின் ஆரம்பக்கட்ட சோதனை வெற்றி.. - இஸ்ரோ அறிவிப்பு!!


 

சந்திரயான்-3 விண்கலத்தின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்த ஆய்வு செய்ய சந்திரயான் 2 விண்கலம்  அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கி.மீ தொலைவே இருந்த நிலையில், விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.  அதன்பின்னர் பலமுறை முயற்சித்தும், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதனால் இந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து சந்திரயான் -3 திடத்தை இஸ்ரோ கையிலெடுத்தது.  இந்தியாவின் நிலவு பயணத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 விண்கலத்தின் ஆரம்பக்கட்ட சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடைபெற்று வந்தது..  

சந்திரயான் 3 விண்கலத்தின் ஆரம்பக்கட்ட சோதனை வெற்றி.. - இஸ்ரோ அறிவிப்பு!!

கடந்த ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெற்ற இந்த சோதனையானது வெற்றிகரமாக நிறைவுபெற்றிருக்கிறது.    இந்த சோதனையானது செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கள் என்று இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான் 3 விண்கலம்  i உந்து விசை, லேண்டர் மற்றும் ரோவர் என 3 முக்கிய தொகுதிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  அடுத்ததாக தொகுதிகளுக்கு இடையே உள்ள ரேடியோ அலைவரிசை தொடர்பு இணைப்புகளை நிறுவுவதற்கான சிக்கலான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2  விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் இதில் இருக்காது என்றும்,  சந்திரயான் 3 விண்கலம் மிகவும் வலிமையானதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் விண்கலத்தில் ஒரு கருவி பழுது அடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெளிவுப்படுத்தி உள்ளது. மேலும் சந்திரயான் 3 விண்கலம் வருகிற ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படலாம் என்றும் இஸ்ரோ விளக்கமளித்துள்ளது.