பராமரிப்பு பணி - திருச்சி ரயில் சேவையில் மாற்றம்

 
train

பராமரிப்பு பணி காரணமாக இன்று நாள் முழுவதும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால்  மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

train

மேலும், திருச்சியில் இருந்து விருதாச்சலம், வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து மாலை 3.45 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் புறப்பட வேண்டிய ரயில் , மாலை 4.28 மணிக்கு புறப்படும். திருச்சியில் இருந்து மாலை 6 மணிக்கு விருதாச்சலம் புறப்பட வேண்டிய ரயில் லால்குடியில் இருந்து மாலை 6.53 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

train

அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு கோவைக்கு புறப்படும் ரயில் திருச்சியில் இருந்து மாலை 4.50 மணிக்கு கோவைக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.