முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

 
kamaraj

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 810 பக்கம் அடங்கிய குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர் தனது பதவி மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் காமராஜ் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் காமராஜின் வீடு மற்றும் அலுவலகம் உட்படல் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன் உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அமைச்சர் காமராஜ் உட்பட 6 பேர் மீது 810 பக்கம் அடங்கிய குற்றப் பத்திரிக்கைய லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்டிரிக்கையை தாக்கல் செய்துள்ளது.