செம்பரம்பாக்கம் ஏரி நாளை காலை 10 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 
முழு கொள்ளளவை எட்டவுள்ள செம்பரம்பாக்கம் ஏரி; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ள நீர் வரத்து காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை காலை (அக்.8) 10 மணியளவில், விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர், வெள்ள நீர் போக்கி வழியாக திறக்கப்படவுள்ளது. ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் அருகே அமைந்துள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். மில்லியன் கன அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 இன்று (07.10.2023) நீர் இருப்பு 21.96 அடியாகவும் கொள்ளளவு 3110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 231 கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நடவடிக்கையாக, இதனால் முன்னெச்சரிக்கை நாளை காலை (08.10.2023) 10.00 மணி அளவில் விநாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 100 கனஅடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிப்பு..

எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.