"தலைநகர் கொலைநகராக மாறி பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!
தலைநகர் கொலைநகராக மாறி பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது என்று ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சென்னையில் தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதன் நிர்வாகிகள் முறைகேடுகளில் ஈடுபட்டு, அடாவடி செய்து வருவதாகவும், அதிமுக தரப்பில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழக காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நிலையில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருவதாகவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
சென்னையில் கடந்த
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 24, 2022
20 நாட்களில் மட்டும்
18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன,
இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது,1/2
சென்னையில் கடந்த
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 24, 2022
20 நாட்களில் மட்டும்
18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன,
இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது,1/2
இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன,இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது, காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.