'திராவிட மாடல்' அரசு புதிய வரலாறு படைத்ததை போல் செஸ் போட்டியையும் வெல்லச் செய்வோம் - அமைச்சர் உதயநிதி
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் நடத்தி, நம்முடைய 'திராவிட மாடல்' அரசு புதிய வரலாறு படைத்ததை போல், இந்த செஸ் போட்டியையும் வெல்லச் செய்வோம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையை புதிய பரிணாமங்களில் விரிவடையச் செய்வதற்கான நம்முடைய தொடர் முயற்சிகளில் ஒன்றாக "சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023" போட்டி நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் சென்னையில் வரும் 15 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான புகழ்பெற்ற வீரர் - வீராங்கனையர் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.
தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையை புதிய பரிணாமங்களில் விரிவடையச் செய்வதற்கான நம்முடைய தொடர் முயற்சிகளில் ஒன்றாக "சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023" போட்டி நடைபெற இருக்கிறது.
— Udhay (@Udhaystalin) December 12, 2023
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் சென்னையில் வரும் 15 முதல் 21ஆம் தேதி…
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் நடத்தி, நம்முடைய 'திராவிட மாடல்' அரசு புதிய வரலாறு படைத்ததை போல், இந்த செஸ் போட்டியையும் வெல்லச் செய்வோம். என்று குறிப்பிட்டுள்ளார்.