சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை!

 
high court

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்ளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த மனுவில், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

மணல்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. சம்மன்களுக்கு மட்டுமே தடை, விசாரணைக்கு தடையில்லை எனவும் கூறின் இந்த வழக்கை19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. அமலாக்கத் துறை ஆட்சேப மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு மூன்று வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல் செய்த மனுக்கள்  தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வழக்கு சம்பந்தமான விவரங்களை பெறுவதற்கு தான் சம்மன் அனுப்பப்பட்டது எனவும்,மணல் கொள்ளை தொடர்பாக பதிவு செய்துள்ள வழக்கு விவரங்களை டிஜிபி கொடுக்கவில்லை எனவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.