இரட்டை இலை சின்னம் - ஓபிஎஸ் கருத்தை கேட்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 
high court high court


எடப்பாடி பழனிசாமி தரப்பு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக பல்வேறு அணிகளாக பிளவுபட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி தினகரனின் அமமுக என பல அணிகளாக உள்ளன. இதனிடையே அதிமுக சின்னம், கொடி தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும் அதிமுக உட்கட்சி தொடர்பாக பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

op

இந்த நிலையில், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பம் மீது ஓபிஎஸ் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்தை தேர்தல் ஆணையம் கேட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு மீது தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.