அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 
sasikala

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார். மேலும் அடுத்த முதலமைச்சராகவும் அவர் காய்களை நகர்த்தி வந்தார். இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு சென்றார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்ட நிலையில், அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கைக்கோர்த்தார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் வலியுறுத்தல் காரணமாக சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதனை எதிர்த்து சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என தீர்ப்பு வழங்கியது. 

high court

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு சசிகலாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.