"சென்னை - நெல்லை வந்தே பாரத் ஆகஸ்ட் 6இல் தொடங்கப்படாது"

 
tn

வந்தே பாரத் ரயிலானது கடந்த 2019 ஆம் ஆண்டு புதுடில்லி - வாரணாசி இடையே முதலில் இயக்கப்பட்டது.  தற்போது சென்னை -மைசூர்,  சென்னை - கோவை என மொத்தம் 23 வந்தே பாரத்  இயக்கப்பட்டு வருகின்றன.  அதிவேகத்தில் செயல் திறன் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு விமானத்திற்கு நிகரான  சுழலும் இருக்கைகள்,  ஏசி,  விசாலமான ஜன்னல்கள் என சொகுசாக பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

vande bharat

தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.  இதேபோல, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. 

fb

இந்த சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 6ம் தேதி பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில்  சென்னை சென்ட்ரல் - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் - நெல்லை வந்தே பாரத் ரயில் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் இயக்கப்படும் என்ற செய்தி வெளியான நிலையில் ரயில்வே வாரியம்  மறுப்பு தெரிவித்துள்ளது.