இளம்பெண்ணின் வாயை பொத்தி பாலியல் அத்துமீறல் - இளைஞர் கைது!

 
harrasment harrasment

சென்னையில் இளம்பெண்ணின் வாயை பொத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை பெருங்குடியில் இளம்பெண் ஒருவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற இளைஞர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணின் வாயை பொத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். அந்த பெண் கையை தட்டிவிட்டு கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் வந்து அந்த இளைஞரை பிடித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் ராமநாதபுரத்தை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற 
இளைஞரை கைது செய்தனர். மது போதையில் தவறு செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.