கோவில் குளத்தில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சென்னை அடுத்த நங்கநல்லூரில் நடந்த கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிழந்துள்ளனர். பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அருகே உள்ளது நங்கநல்லூர், இவ்வூரில் உள்ளது தர்மலிங்கேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது . இதனால் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டியினர் .
அப்போது ஒரு அர்ச்சகர் குளத்தில் மூழ்கினார். அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். இப்படி ஐந்து அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவில் திருவிழாவில் 5 அச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் .
இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.