மத்திய அரசின் சிறந்த புலனாய்வு அதிகாரி விருது - சென்னையை சேர்ந்த 2 காவல் அதிகாரிகள் தேர்வு..

 
மத்திய அரசின் சிறந்த புலனாய்வு அதிகாரி விருது - சென்னையை சேர்ந்த 2 காவல் அதிகாரிகள் தேர்வு..

மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்கு, சென்னையை சேர்ந்த 2 காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.  அந்தவகையில்  2023-ம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வு அதிகாரி விருதுக்கு அடையாறு காவல் துணை ஆணையர் ஆர்.பொன்கார்த்திக் குமார் மற்றும்  சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் எஸ்.ஜான்விக்டர் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர்.  

இதில்,  துணை ஆணையர் பொன்கார்த்திக் குமார்,  2018-ல் சேலம்மாவட்டம் ஆத்தூர் உட்கோட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில்,  12 வயது சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட  வழக்கில் திறமையாக புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியைக் கைது செய்தார். மேலும், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தந்துள்ளார்.

Central Govt

அதேபோல் உதவி ஆணையர் ஜான் விக்டர், கடந்த 2015-ல் சிபிசிஐடி கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய போது,  16 வயது சிறுமி காணாமல்போன வழக்கை திறம்பட கையாண்டு,  ஒரே நாளில் சிறுமியை கண்டுபிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தார். அத்துடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, சாட்சிகளை ஆஜர்படுத்தி ,  வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு  இரட்டை ஆயுள் தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மேலும் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டையும் பெற்றுத்தந்துள்ளார்.  இவ்வாறு சிறப்பாக பணியாற்றியதற்காக  இருவரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டுகளை தெரிவித்தார்.