வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - வேளச்சேரி பேபி நகர் மக்கள் தவிப்பு

 
velachery

சென்னையில் பெய்த கனமழையால் வேளச்சேரி பேபி நகரில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றானர். 

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்க தொடங்கின. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும்  பாதிக்கப்பட்டது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு பகுதிகளிலும் மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மின் விநியோகமும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. 

flood

இந்த நிலையில், வேளச்சேரி பேபி நகரில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றானர். வரலாறு காணாத கனமழையால் வேளச்சேரி பேபி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாததால், அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். தங்களை விரைந்து மீட்குமாறு சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.