பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட சென்னை வொண்டர்லா... டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டின் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மகாபலிபுரம் பகுதியில் அமைந்துள்ள வொண்டர்லா சென்னை, ஒரு முக்கிய சுற்றுலா வினையூக்கியாக மாறத் தயாராக உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகில் ‘சென்னை வொண்டர்லா’ என்ற பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் போன்ற நகரங்களில் செயல்பட்டு வந்தது. இப்போது அதே தரத்தில் ஒரு பெரிய பூங்கா தமிழ்நாட்டிலும் திறக்கப்பட்டுள்ளது.
வொண்டர்லா பூங்கா இதுவரை தமிழகத்தில் இல்லாததால், பல இளைஞர்கள் குடும்பத்தினருடன் பெங்களூருக்கு சென்று சாகச விளையாட்டுகளை அனுபவித்து வந்தனர். இந்தத் தேவையை கருத்தில் கொண்டு, சென்னையிலும் வொண்டர்லா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, தற்போது செங்கல்பட்டில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவாகும்.65 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ 611 கோடி செலவில் இந்த தீம் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் முதல் இன்வெர்ட்டர்ட் கோஸ்டர் அமைகிறது. இந்த ரோலர் கோஸ்டர் தான் சென்னை வொண்டர்லாவின் முக்கிய ரைடாக அமையும். மேலும், ஸ்பின் மில், மார்விக் என ஏகப்பட்ட ரைட்கள் உள்ளன. சென்னை வொண்டர்லாவில் பெரியவர்களுக்கு மட்டும் 42 வகை சவாரிகள் உள்ளன. இதில் 16 நீர் சவாரிகளாகும். குழந்தைகளுக்காக 10 தனிப்பட்ட சவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 52 சவாரிகள் உள்ள இந்த பூங்கா அனைத்து வயதினருக்கும் பொழுதுபோக்கை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்கா செயல்படுவதன் மூலம் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறதாம். கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீசனுக்கேற்ப மேலும் பல சலுகைகளும் அறிவிக்கப்படலாம். ட்டுள்ளது.சென்னை வொண்டர்லாவின் அடிப்படை நுழைவு கட்டணம் ஒருவருக்கு ஜிஎஸ்டி உட்பட ரூ.1489 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வொண்டர்லாவில் வார இறுதி நாட்களில் நுழைவு கட்டணம் ரூ.1789 ஆகும். சிறப்பு திறப்பு நாளான நாளை, வருகை தரும் பொதுமக்களுக்கு ரூ.1199 என்ற சலுகை விலையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


