சிக்கன் ரைஸ்: 26 பேருக்கு வயிற்றுப் போக்கு
கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடை அமைந்துள்ளது. இங்கு பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதே கடையில் சாப்பிட்ட 8 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் வட மாநிலத்தவருக்கு தனியார் உணவகத்தில் இருந்து 150 கிலோ சிக்கன் ரைஸ் வாங்கி சென்றுள்ளனர். இதில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.