'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' குறித்து முதல்வர் ஆலோசனை..

 
stalin

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

முத்திரை பதிப்பகம் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தைலமே செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அரசின் முன்னெடுப்பு திட்டங்கள் ஆன முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என்கிற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 4 முறை நடைபெற்றிருக்கிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. 

நாளை முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அரசு அனுமதி!

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு,  உதயநிதி ஸ்டாலின்,  பெரிய கருப்பன், சக்கரபாணி, கீதா ஜீவன், சாமிநாதன், காந்தி, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இவர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசுத்துறை முதன்மை செயலாளர், துறை வாரியான உயர் அதிகாரிகளும் பங்கேற்று உள்ளனர. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைப்பாடுகள், புதிய திட்டங்கள் தொடக்கம் உங்கிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் முதல்வர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.