வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திட முதல்வர் அறிவுறுத்தல்!!

 
ttn

வெள்ள நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளார்.

ttn

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு நிவாரண நடவடிக்கைகளை கண்காணித்து பணிகளை துரிதப்படுத்த,  அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட அமைச்சர்களையும்,  மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களையும் , தமிழக முதல்வர் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு மாவட்டங்களில் மழை வெள்ள நிவாரண குறித்து கேட்டறிந்தார்.

ttn

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து,  அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் , உடனுக்குடன் எடுத்திட அறிவுறுத்திய தமிழக முதல்வர் ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள,  மக்களுக்கு தரமான உணவு , மருத்துவ வசதி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் உத்தரவிட்டார்.மேலும் துறை அலுவலர்கள்,  பயிர் சேதங்களை  தவிர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ttn

முன்னதாக இன்று காலை தலைமைச் செயலகத்தில் மாநிலத்தில் மழை வெள்ளம் நிலை குறித்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும்,  ஆய்வு செய்திட தமிழக முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ,முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.