புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 
stalin

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் லலித் கால அகாடமியில்,  ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்கிற பெயரில் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த  புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்து, புகைப்பட தொகுப்பு புத்தகத்தை புத்தகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார்.  புகைப்பட கண்காட்சி ஒருவாரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.