#Breaking மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்தார் முதலமைச்சர்

 
tn

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க ஓமந்தூரார் மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார். 

tn

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது. பாஜகவின் பழிவாங்கும் நோக்கம் என்று இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில்  இன்று அதிகாலை 2 மணி அளவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் பார்த்து வருகின்றனர்.

cm stalin

இந்நிலையில் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அத்துடன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.