முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது..!
“திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று 29-11-2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
எம்.பி.க்களில் சிலர் மாவட்ட செயலாளர்களாகவும் உள்ளனர். இந்த கூட்டத்தில், எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்தும், எம்.பி.க்களின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. வருகிற திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. எம்பிக்கள் கூட்டம்.
— Top Tamil News (@toptamilnews) November 29, 2025
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எம்பிக்களிடமிருந்து பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு.
SIR உள்ளிட்டவை குறித்தும், எம்பிக்களின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசனை.#MKStalin #DMK #MP #SIR2025 pic.twitter.com/MoYMV2ZnH1
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. எம்பிக்கள் கூட்டம்.
— Top Tamil News (@toptamilnews) November 29, 2025
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எம்பிக்களிடமிருந்து பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு.
SIR உள்ளிட்டவை குறித்தும், எம்பிக்களின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசனை.#MKStalin #DMK #MP #SIR2025 pic.twitter.com/MoYMV2ZnH1


