முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி.! தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி ..!

 
1 1

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று, மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் அவர்களை ஒன்றுதிரட்டி, உறுதிமொழியேற்றிட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். 

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளிலும் திமுகவில் இணைந்த குடும்பத்தினர் தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டோம் என உறுதிமொழியேற்றனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்வுகளில் அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், இளைஞர், இளம்பெண்கள் என திரளானோர் கலந்துகொண்டு உறுதிமொழியேற்றனர்.

மாநிலத்தின் உரிமை காக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம், நீட் தேர்வு ஒழிப்பு, உரிய கல்வி நிதிக்காக போராடுவோம் என 68,000 பூத்களிலும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

1
நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

நான், ‘பெண்கள் – விவசாயிகள் – மீனவர்கள் – நெசவாளர்கள் தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்”