தொல்காப்பியப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!!

 
ttn

தொல்காப்பியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால்  கடந்த 2008ஆம் ஆண்டு சுமார் 58 ஏக்கர் பரப்பிலான தொல்காப்பிய பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னை அடையாரில் உள்ள தொல்காப்பிய பூங்கா வினை பார்வையிட்டு அங்கு நடைபெற்றுவரும் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

mm

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார் துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும், கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்பு பணிகள் மற்றும் சுமார் 2,773.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள,  பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் சீரமைப்பு எண்ணூர் கழிமுகப் பகுதியில், சுற்றுச்சூழல் சீரமைப்பு ஆகிய பணிகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் விரிவாக ஆய்வு மேற்கொண்டார் . சீரமைப்பு பணிகள் அரசின் பல்வேறு துறைகளான பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சென்னை மாநகராட்சி நகராட்சி நிர்வாக இயக்குனராக பேரூராட்சிகள் ஆணையரகம் ,ஊரக வளர்ச்சி இயக்குனரகம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளன.

stalin

சீரமைப்பு பணிகள் இன் ஒருபகுதியாக ஆற்றின் கரையோரங்களில் தாவரங்கள் நடவு செய்யக் கூடிய பணிகள் பெருநகர சென்னை மாநகராட்சி யார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான மறுவாழ்வு திட்டம் பணிகள் விரிவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தூர்வாரும் பணிகள் திடகழிவு அகற்றுதல் பாதுகாப்பு, வேலி அமைத்தல் கழிவுநீரை இடைமறித்து மாற்றுவழிகளை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

mm

அத்துடன் நீர்வள ஆதார துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய் கூவம் மற்றும் அடையாறு வடிகால்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்தும் தமிழக முதல்வர் அலுவலர்களிடமும் கேட்டறிந்தார். அத்துடன் நீரை எண்ணூர் கழிமுகப் பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான மத்திய கடல் சார் ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், பூங்காவிற்கு அதிக அளவில் மாணவர்கள் வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.