கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!!
மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்தார் கு.க.செல்வம். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மீதான அதிருப்தி காரணமாக கு.க.செல்வம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் 2022 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம். அவருக்கு திமுகவில் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. உடல்நலக்குறைவால் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கு.க.செல்வம் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமான திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை கோடம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய நிலையில் திமுக பொருளாளரும், எம் .பி.யுமான டி.ஆர்.பாலு உடனிருந்தார்.