அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஆய்வு- ரூ.21 கோடியில் மேம்படுத்த உத்தரவு
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்ததோடு, அங்கு உணவருந்த வந்த பயனாளிகளோடும் உரையாடினார்.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்கவும், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ரூ.21 கோடி செலவில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்தவும் உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தினார்.


