முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேச்சை கேட்டபோது குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் தி.மு.க. அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசிய எம்.எல்.ஏ. எ.வ.வேலு, “காலை உணவு திட்டத்தை மாற்றி காமராஜர் பெயரை வைப்பதற்கான அவசியம் என்ன? புதிய திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வையுங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். முதலமைச்சர் என்பது பொதுவான சொற்சொடர். அது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல. ஆகையால் ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்' என்றுதான் பெயர் வைத்தோம்.
ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்கலாம் என கூறியபோது ஸ்டாலின் அதை மறுத்தார். முதல்வர் காலை உணவுத் திட்டம் என பெயர் வைத்தால் யாரும் அந்தப் பெயரை மாற்ற மாட்டார்கள் என ஸ்டாலின் கூறினார். நாங்கள் உருவாக்கிய திட்டத்துக்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “காமராஜருக்கு சென்னையில் சிலை அமைத்து பிரதமர் நேருவை அழைத்துவந்து திறந்தோம். குடியாத்தம் தொகுதியில் காமராஜரை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தாதவர் அண்ணா. காமராஜருக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதிதான். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து பெருமை சேர்த்தார் கருணாநிதி" என்று எம்.எல்.ஏ. எ.வ.வேலு தெரிவித்தார்.இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “திட்டங்கள் மக்கள் வரி பணத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு முன், எத்தனை திட்டங்களுக்கு நீங்கள் பெயர் மாற்றியிருக்கிறீர்கள்? காலை உணவுத்திட்டம், காமராஜர் காலை உணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த திட்டத்திற்கு காமராஜர் பெயரை விட, பொருத்தமான பெயர் வேறு எதுவும் இல்லை.திட்டங்களின் பெயர்களை மாற்றுவது காலம் காலமாக திமுக ஆட்சியிலும் செய்யப்பட்டதுதான்" என்று அவர் கூறினார்.அப்போது, திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, "இப்பொழுது சட்டப்பேரவையில் இருக்கும் இந்த கலைநயத்தோடு கூடிய மேசைகளும், மைக்குகளும் திமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நான் இரவு பகலாக பார்த்து பார்த்து செய்தது." என்றார்
அதற்கு அமைச்சர் ராஜ்மோகன், "அந்த டேபிளை செய்தது நாங்கள்தான்; அந்த மைக்கை செய்தது நாங்கள்தான்; அந்த நாற்காலியை செய்தது நாங்கள்தான் என சொல்கிறார்; இது மக்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு செய்தது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்இவ்வாறு விவாதம் நடைபெற்றது." என்று கூறினார். இதனை அவையில் இருந்து கேட்ட முதல்வர் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் திமுக அமைச்சர் ஈ.வி. வேலு பேச்சை கேட்டபோது சிரித்தார்.#Politics #TamilNadu #JosephVijay #EVVelu #Speech #FrontmediaTV pic.twitter.com/563CIRVERA
— FRONTMEDIA-தமிழ் (@frontmediatv) August 18, 2026

