நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் - முதல்வர் நிதியுதவி அறிவிப்பு..

 
stalin

சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சேலம் மாவட்டம், சேலம் வட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் 22-4-2023 அன்று நண்பகல் குளிக்கச் சென்ற கன்னங்குறிச்சி கிராமம், கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரசாந்த், த/பெ.சம்பத் (வயது 17) மற்றும் பாலாஜி, த/பெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 16) ஆகிய இரண்டு மாணவர்களும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

நீரில் மூழ்கி உயிரிழப்பு

இதேபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வி.குமாரமங்கலம் கிராமம் பெரியகாலனியைச் சேர்ந்த தினேஷ், த/பெ.தெய்வசிகாமணி (வயது 14) மற்றும் இன்பரசன், த/பெ.சுந்தரபாண்டியன் (வயது 8) ஆகிய இருவரும் 23-4-2023 அன்று காலை அதே கிராமத்திலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.