ஆவினில் குழந்தை தொழிலாளர் முறையா?: அமைச்சர் பதில்

 
cv ganesan

அம்பத்தூர் ஆவின் விவகாரத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். 

aavin

இந்நிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் தலைமையில்,தமிழ்நாடு அமைப்புசார ஒட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 6-வது வாரியக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி. கணேசனிடம் ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Ganesan

அதற்கு பதிலளித்த அவர், அம்பத்தூர் ஆவின் விவகாரத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தால் விசாரணை மேற்கொள்ளப்படும்  என்று  அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து துறை செயலாளருக்கு உத்தரப்பட்டுள்ளதாகவும்,  உரிய  விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார். ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக எழுந்த புகாரில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.  தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை;  ஒருவேளை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.