கிறிஸ்துமஸ் பண்டிகை - ஜி.கே. வாசன் வாழ்த்து

 
gk vasan

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

tn

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறிஸ்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறிஸ்தவக் கருத்துகளோடு, கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறிஸ்துமஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.


இந்நிலையில்  தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் தனது சமூகவலைதள பக்கத்தில், அறியாமை இருள்நீங்கி ஒளிமயான வாழ்க்கை அமைய இவ்வுலகில் அவதரித்த இறைத்தூதர் இயேசுகிறிஸ்து பிறந்தநாளில் அனைவரது வாழ்விலும் இனிமை தங்கவும், மகிழ்ச்சி பெறுகவும், செல்வம் சேரவும், ஆரோக்கியம் கூடவும், எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.