கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 
tnn

கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டரானார் தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி.  கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று 84வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் வைஷாலி. இதன்மூலம் தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும், இந்தியளவில் 3வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "இந்தியாவின் 3வது பெண் கிராண்ட் மாஸ்டரும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டருமான வைஷாலிக்கு எனது பாராட்டுகள். நீங்கள்தான் இப்போது முதல் கிராண்ட் மாஸ்டர் உடன்பிறப்புகள். உங்கள் சாதனைகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உங்களின் பயணம் செஸ் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும். இது, தமிழ்நாட்டில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான சான்றாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.