"கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!!

 
tn

டெல்லி நிர்வாக மசோதாவுக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

aravind

மாநிலங்களவையில் நேற்று டெல்லி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. சுமார் எட்டு மணி நேர விவாதத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி,  மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.  டெல்லி அவசர சட்டம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 131 எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தும் ,  102 வாக்குகளும் பதிவாகின. 

குறிப்பாக அதிமுக எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கு இடையே அடிக்கடி மோதல் போக்குகள் ஏற்பட்ட வந்த நிலையில்,  டெல்லி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் குடிமை பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருப்பதை என்பதற்கான மோதல் வெடித்தது. இந்த விவகாரத்தில் டெல்லி அரசு சட்டத்தை திருத்தும் வகையில் குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிராகரிக்கும் வகையில் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.இதன் மூலம் டெல்லி நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார் என்றும் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம் பணியிடமாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் "தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்!எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற @BJP4India-வின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது? 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்!

மூன்று மாதமாக #Manipur எரிகிறது. அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. "நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார்.