ஈபிஎஸ், அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Updated: Mar 14, 2024, 12:15 IST1710398724557
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு.தொடர்ந்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈபிஎஸ், அண்ணாமலை பேசியதாக மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈபிஎஸ், அண்ணாமலை மீது கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது