க.அன்பழகனின் முழுஉருவச் சிலையினை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
க.அன்பழகனின் முழுஉருவச் சிலையினை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பேரறிஞர் அண்ணா அவர்களால் "பேராசிரியர் தம்பி” என்று அன்போடும் அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன். பேராசிரியர் க. அன்பழகன் 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆண்டு தொடங்கி 1971 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற காலகட்டத்தில் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றினார். அத்துடன் 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இவ்விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.