" ஓய்வு நேரங்களில் இயற்கையோடு இணைந்து இருங்கள்" - முதல்வரின் உலக காது கேட்கும் தின செய்தி!

 
stalin

மார்ச் 3ஆம் தேதியான இன்று உலக காது கேட்கும் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " செழுமையான கருத்துகளைச் செவிவழியாக பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வம் என அய்யன் திருவள்ளுவர் , 'செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என சொல்கிறார் அத்தகைய செல்வமான செவித் திறன் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெற்றாக வேண்டும்.

stalin

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் ஆன அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு விளிம்புநிலை மக்களின் நலனை கவனத்தில் கொண்டு செயல்பட்ட தன்னிகரில்லா தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்பதையும் உணர்த்தும் விதமாக , cochlear implant சிகிச்சைக்காக அவர் உதவியது குறித்து பிரபல மருத்துவர் மோகன் காமேஸ்வரன் கலைஞருக்கான மருத்துவர்களின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் நெக்குருகி பேசியது என் நினைவுகளில் இன்றும் நிழலாடுகிறது. புதிய  ஒளி சாதனங்களைப் பயன்படுத்தும் நாம் அவற்றைப் பற்றி புரிதல் ஏற்படுத்திக்கொள்ள விழிப்புணர்வாக  அமைந்திருக்கிறது. 

CM Stalin

மாணவச் செல்வங்களும், இளைஞர்களும் தங்களுடைய ஆடியோ சாதனைகளில் அதிக ஒளி வைத்து நீண்ட நேரம் கேட்டால் ,அவர்களை காது நரம்புகள் பாதிக்கப்பட்டு கேட்கும் திறன் இளம் வயதிலேயே ,குறைய வாய்ப்புள்ளது என்று மருத்துவர்களும், அறிவியலாளர்களும் விடுக்கும் எச்சரிக்கையை சற்றே ,காதுகொடுத்து கேட்கவேண்டும்.  வாழ்நாள் முழுவதும் துல்லியமாக கவனமுடன் கேளுங்கள்,  ஓய்வு நேரங்களில் இயற்கையோடு இணைந்து இருங்கள்,  அதிக ஒலி எழுப்பும் உங்களிடமிருந்து விலகி இருங்கள் , எளிய உடற்பயிற்சி செய்யுங்கள் , வருங்காலத்தை உடல் நலத்தோடு உற்சாகமாக எதிர் கொள்ளுங்கள் என்று இந்நாளில் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.