தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும் - முதலமைச்சர் வாழ்த்து!

 
stalin

தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும், அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணம், #பொங்கல்_பரிசுத்தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கியுள்ளோம். தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும்.  அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்.


"நான்தான் எல்லாம்" என்ற சர்வாதிகாரப் போக்கு அகல, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் ஆட்சி ஒன்றிய அளவில் அமைய வேண்டும். அதற்கு திமுக இளைஞர் அணியின் சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் #மாநில_உரிமை_மீட்பு_முழக்கம் டெல்லி வரை அதிரட்டும். கவனச்சிதறல்களுக்கு இடம்கொடுக்காமல் மாநாட்டின் மையநோக்கத்தை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.