அண்ணாவின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணாவின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்!
என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். சென்னை வாலாஜா சாலையில் இருந்து தொடங்கிய அமைதி பேரணி அண்ணா சதுக்கத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பொன்முடி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்!
— M.K.Stalin (@mkstalin) February 3, 2023
தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம். (1/2) pic.twitter.com/CqKKfOASaW
இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்! தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்!
தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம். என குறிப்பிட்டுள்ளார்.