"இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம்" - முதல்வர் ஸ்டாலின் பேட்டி!!

 
tn

தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்பு குறித்து விரிவாக பேச விரும்புகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

tn

தலைநகர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் காப்பாற்றப்பட்டனர். புயலுக்கு முன்பும், பின்பும் அரசு எடுத்த நடவடிக்கையால்தான் பாதிப்புகள் குறைந்தது. ஒன்றிய அரசின் குழுவினர் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம்.

mk stalin

ஒன்றிய அரசின் நிதி வரட்டும் என காத்திருக்காமல் 4 மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை அரசு அறிவித்தது. ஒன்றிய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. வரலாற்றில் இதுவரை பதியப்படாத அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகி இருந்தது. ஒராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் கொட்டித் தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். தென் மாவட்டங்களில் 8 அமைச்சர்கள், 10 ஆட்சி அலுவலர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது தென் மாவட்டங்களில் மழையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வானிலை மையம் தெரிவித்ததை விடவும் அதிகமாக மழை பெய்துள்ளது. மழை பொழிவு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.