அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Apr 28, 2025, 13:14 IST1745826292735
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கிழ் அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபரிலேயே அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்படுகிறது.
பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவது தொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்டம்பர் 30க்குள் அறிக்கை வெளியிடப்படும். அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம், கலை அறிவியலுக்கு ரூ.50,000 முன்பணம் வழங்கப்படும். சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும் என கூறினார்.


