அவதூறு பரப்பும் நோக்கிலேயே எதிரணியினர் செயல்பட்டு வருகிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

அவதூறு பரப்பும் நோக்கிலேயே எதிரணியினர் செயல்பட்டு வருகிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடத்தப்படும் சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும் நீட் விலக்கு – நம் இலக்கு கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  தமிழினத்தை தலை நிமிர்த்துவதற்காக பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். இப்போது ‘சீவிடுவேன் சீவிடுவேன்’ என சொல்கிறார்களே, அப்படி யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கமல்ல. அவதூறு பரப்பும் நோக்கிலேயே எதிரணியினர் செயல்பட்டு வருகிறார்கள். அந்த அவதூறுகள் பொய் என்பதை நாம் சமூகவலைத்தளங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர்மறை விமர்சனம் மூலம் எதிரிகளை வீழ்த்துவதை விட நேர்மறை விமர்சனம் மூலம் கட்சியை வளர்ப்பதே சரியானது.  பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.