மக்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றாக இருக்க போராடியவர் அயோத்தி தாசர் - முதலமைச்சர் பேச்சு

 
stalin

மக்கள் அனைத்து வேற்றுமையையும் மறந்து, ஒன்றாக இருக்க போராடியவர் அயோத்தி தாசர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

அயோத்தி தாசர் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர்.  இந்நிலையில் அயோத்திதாச பண்டிதரின் 175ஆவது ஆண்டு விழாவின் நினைவாக,  சென்னையில் திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ.2.49 கோடி செலவில் உருவச் சிலையுடன் மணி மண்டபம் அமைக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

tn

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ் சிந்தனை மரபை வளர்த்தெடுத்தவர் அயோத்திதாசப் பண்டிதர். இந்த மணிமண்டபம் அறிவொளி இல்லமாக அமைந்துள்ளது. தமிழ் அல்லது திராவிடம் மொழி மட்டும் அல்ல, அது ஒரு பண்பாட்டு நடைமுறையாக மாற்றியவர். மக்கள் அனைத்து வேற்றுமையையும் மறந்து, ஒன்றாக இருக்க போராடியவர் அயோத்தி தாசர். சாதிய அடுக்கு முறை சமூகத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தலைசிறந்த சிந்தனையாளர்களில் அயோத்திதாச பண்டிதர் குறிப்பிடத்தக்கவர். இவ்வாறு கூறினார்.