தேர்தல் முடியும் வரை தமிழக ஆளுநரை மாற்ற வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையில் திமுக வழக்கறிஞரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து திருமண விழாவில் பேசிய அவர், மக்களவை தேர்தல் முடியும் வரை தமிழ்நாடு ஆளுநரை மாற்றக்கூடாது என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். 

திராவிடம் என்றால் என்ன எனக் கேட்கிறார்களே அவர்களின் பதவியே வேஸ்ட்தான். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பதே திராவிடம் தான். மத்திய பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மக்கள் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு கூறினார்.