மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கும் வரை ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள் - முதலமைச்சர் பேச்சு

 
cm stalin

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் மகளிர் உரிமைத்தொகையை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் தமிழகத்தை ஆள்கிறான் என்று பொருள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதாமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி  கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்த முடியாது என்பதால் இந்த திட்டம் நேற்றே தொடங்கப்பட்டது.'

mk stalin

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் நீடிக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறான் என்றார் பேரறிஞர் அண்ணா. அதேபோல் இன்று ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் மகளிர் உரிமைத்தொகையை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.  

பயன் எதிர்பார்க்காமல் வாழ்நாளெல்லாம் உழைக்க கூடிய பெண்களுக்கு அளிக்க கூடிய அங்கீகாரம்தான் ஆண்டுக்கு 12,000 ரூபாய். பெண்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பயன்படும். மாதம் 1000 ரூபாய் தங்கள் வாழ்வினை சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும் மனிதநேய அடிப்படையிலான, பெண்ணுரிமையைக் காக்க கூடிய எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு கைவிட்டு விடாது. இவ்வாறு கூறினார்.