இன்னார்க்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாமும் என்பது திராவிடம் - முதலமைச்சர் பேச்சு

 
stalin

இன்னார்க்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாமும் என்பது திராவிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள், குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மதுரை மேயர் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்த நினைவிடம் வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுள்ளார். 

tn

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி . பசும்பொன்னில் 2 மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளன . தேவர் பெயரில் பல்வேறு இடங்களில் கல்லூரிகள் அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி . ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை  எடுக்கப்படும். இன்னார்க்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாமும் என்பது திராவிடம். இவ்வாறு கூறினார்.