முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
Stalin

முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  400 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ள காலணி தொழிற்சாலை மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2028ம் ஆண்டிற்குள் ரூ.2440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது. வளர்ச்சி திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். முதற்கட்டமாக ரூ.400 கோடி முதலீட்டில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2028-ம் ஆண்டிற்குள் ரூ.2,440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவுள்ளது. இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இவ்வாறு கூறினார்.