‘எல்லோர்க்கும் எல்லாம்’என்ற நோக்கத்துடன் தமிழக பட்ஜெட் அமைந்திருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம், இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம், தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
👩 மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்
— M.K.Stalin (@mkstalin) March 14, 2025
💪 ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்
👩💻 இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்
🏭 தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்
🏙️ புதிய நகரம்
🛫 புதிய விமான நிலையம்
💧 புதிய நீர்த்தேக்கம்
🚆 அதிவேக ரயில்… pic.twitter.com/ViQg6AdEmJ
‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக பட்ஜெட். மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.


