சி.ஏ.பி.எப். தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என அறிவிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

 
stalin

சி.ஏ.பி.எப். இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ள நிலையில், இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். 

நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நாடு முழுவதும் வரும் 2024 ஜனவரி 1-ந்தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார். சி.ஆர்.பி.எஃப். தேர்வு தமிழிலும் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
இந்த நிலையில், மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும். நான் எழுதிய கடிதத்தின் விளைவாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.